சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 5 2020 2:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு.புவியரசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று காரணமாக மீனவர்கள் இன்றும், நாளையும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.