தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் - தமிழக அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்
Jun 5 2020 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தனியார் மருத்துவமனைகளை தமிழக அரசு கையகப்படுத்தி கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கோரி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளை தமிழக அரசு கையகப்படுத்தி கொரோனா சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மதுவாயலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.