சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் நீண்ட நாளாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் : ஜெயா டி.வி. செய்தி எதிரொலியாக மின்மாற்றியை சீர் செய்த அதிகாரிகள்
Jun 5 2020 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா டி.வி. செய்தி எதிரொலியாக, சிவகங்கை மாவட்டம் சூரக்குடி மக்களின் நெடுநாள் வேண்டுகோளான, குறைந்த அழுத்த மின்சார பற்றாக்குறையை, 100 கேவி திறனுள்ள மின் மாற்றியாக அதிகாரிகள் அமைத்துக் கொடுத்ததால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிங்கம்புணரி அருகே சூரக்குடியில் குறைந்த அழுத்த மின்சார பற்றாக்குறையினால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த செய்தியை ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதன் தொடர்ச்சியாக, அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இதன் விளைவாக, மின்சார வாரிய அதிகாரிகள் உடனே களம் இறங்கி ஆய்வு செய்து, கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, புதிய மின் மாற்றி அமைத்து மின் பற்றாக்குறையை தீர்த்து வைத்தனர்.