இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறைகளை 15 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Jun 5 2020 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இடம்பெயரும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் 15 நாட்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, பல்வேறு மாநிலங்கள் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களுடன் தகவல் அளிக்கப்படுவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதுதொடர்பாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய தமிழக அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, 15 நாட்களுக்குள் அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.