மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்கக்கூடாதா? : ராஜீவ் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
Jun 5 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜிவ் கொலை வழக்கில் முருகன், தனது தாயாருடன் தொலைபேசி மூலம் பேச மனிதாபிமான அடிப்படையில் கூட அனுமதி வழங்க முடியாதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முருகனின் தந்தை அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, இலங்கையில் வசிக்கும் அவரது தாயார் பத்மா, தொலைபேசி மூலம் முருகன் மற்றும் நளினியிடம் பேச அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மற்ற கைதிகளுக்கு பேச அனுமதியளிக்கும் போது, முருகன் மற்றும் நளினிக்கு மட்டும் அனுமதி மறுப்பது அடிப்படை உரிமையை மீறிய செயல் எனக்கூறி, விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.