தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு மீறல் : ரூ.10.22 கோடி வசூல்
Jun 5 2020 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், இதுவரை 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 72 நாட்களில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 877 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 566 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 48 ஆயிரத்து 456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், 10 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரத்து 599 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.