திருச்சி அதவத்தூர் பாளையத்தில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை - எரிந்த நிலையில் உடல் கண்டெடுப்பு

Jul 7 2020 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே, 14 வயது சிறுமி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி. குப்பை கொட்டுவதற்காக பிற்பகலில் வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பாத நிலையில், காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அவர்களின் வாகனங்களை மறித்து, சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறை வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனைத் தொட்ர்ந்து, திருச்சி டி.ஐ.ஜி. திருமதி ஆனி விஜயா, திருச்சி எஸ்.பி. ஜியா உல் ஹக் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இளம்பெண்ணின் மரணத்திற்கு உரிய நீதி விசாரணை வேண்டும் எனவும், சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் சிறுமிகள் மீதான வன்முறை அதிகரித்து வருவது, அனைத்து தரப்பினரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00