சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - இன்று ஒரே நாளில் 29 பேர் பலி
Jul 7 2020 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று காலை 9 மணி நிலவரப்படி, 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனாவிற்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று மட்டும் இதுவரை 29 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேரும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 6 முதியவர்கள் உள்ளிட்ட 10 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.