தமிழகத்தில் ஊரடங்கு மீறல் - ரூ.17.30 கோடி அபராதம் வசூல்
Jul 7 2020 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 17 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 104 நாட்களில், 8 லட்சத்து 17 ஆயிரத்து 968 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 7 லட்சத்து 46 ஆயிரத்து 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 23 ஆயிரத்து 88 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம், 17 கோடியே 30 லட்சத்து 53 ஆயிரத்து 286 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.