சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,990 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை : சென்னை மாநகராட்சி
Jul 7 2020 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 2 ஆயிரத்து 990 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 70 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 24 ஆயிரத்து 52 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 44 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், ஆயிரத்து 82 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 990 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 2 ஆயிரத்து 447 பேருக்கும், அண்ணாநகரில் 2 ஆயிரத்து 383 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராயபுரத்தில் ஆயிரத்து 999 பேரும், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 898 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 810 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
அடையாறில் ஆயிரத்து 673 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 314 பேருக்கும், திருவொற்றியூரில் ஆயிரத்து 243 பேருக்கும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 228 பேருக்கும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆலந்தூரில் 968 பேரும், மாதவரத்தில் 909 பேரும், பெருங்குடியில் 890 பேரும், சோழிங்கநல்லூரில் 587 பேரும், மணலியில் 551 பேரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள சிகிச்சை பெற்று வருகின்றனர்.