கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததற்கு போராட்டம்
Jul 9 2020 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த மாதம் ஊதியம் வழங்காததைக் கண்டித்து, கீரிப்பாறை கோட்டத்தில் பணியாற்றி வரும் அரசு ரப்பர்
தோட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுக்கு நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. நான்கு கோட்டங்களுக்குட்பட்ட 9 பகுதிகளில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்திற்கான ஊதியத்தை அரசு ரப்பர் கழகம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்து, கீரிப்பாறை கோட்டத்தில் பணியாற்றி வரும் 100க்கும் மேற்பட்ட ரப்பர் பால் வடிப்பு தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.