புதுச்சேரியில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழப்பு
Jul 9 2020 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று 2 பேர் உயிரிழந்ததையடுத்து இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் கொரோனா பரவலை குறைக்க முடியும் என அவர் கூறினார்.