நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோவில் ஊழியர் இருவருக்கு கொரோனா தொற்று - இன்று முதல் 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு
Jul 10 2020 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையத்தில் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய விண் வெளி ஆராய்ச்சி மையம் 5 நாட்களுக்கு மூடப்படும் என மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகிலுள்ள மகேந்திரகிரி மலையில் மத்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இயங்கி வருகிறது. இங்கு செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட்டில் பொறுத்தப்படும் கிரயோஜனிக் என்ஜின் சோதனை நடைபெறும். இங்கு பணிபுரியும் ஊழியர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனையடுத்து இஸ்ரோ விண்வெளி மையம் இன்று முதல் 14-ம் தேதி வரை 5 நாட்கள் மூடப்படுவதாக விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.