சாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
Jul 10 2020 12:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். இதேபோல், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெனிக்ஸ நண்பர் மணிமாறன், சம்பவம் நிகழ்ந்த அன்று எந்த நடந்தது என்பது குறித்து எழுத்து பூர்வமாக வாக்குமூலம் அளித்ததாக தெரிவித்தார்.