முழு ஊடரங்கு காலத்திற்கான 1000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது - ஜூலை மாதத்திற்கான இலவசப் பொருட்கள் இன்றுமுதல் விநியோகம்
Jul 10 2020 1:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முழு ஊடரங்கு காலத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் நிவாரணத்தை வாங்காதவர்கள் அதை வாங்குவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. ஜூலை மாதத்திற்கான இலவசப் பொருட்கள் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன.
கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை 1.53 லட்சம் பேர் வாங்கவில்லை. இதையடுத்து நிவாரணம் வழங்குவதற்காக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் இம்மாதத்திற்கான இலவச அத்தியாவசியப் பொருட்கள் இன்றுமுதல் வழங்கப்படுகின்றன. இதற்காக ஏற்கெனவே டோக்கன்கள் வீடுகள்தோறும் விநியோகிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்குமாறு கடை ஊழியர்களை கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.