ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் திடீர் போராட்டம் - தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்
Jul 10 2020 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முறையான உணவு வழங்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது அவர்கள் கொரோனா வார்டில் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையில் அரசு வழங்கும் தரமற்ற உணவை சாப்பிட்ட செவிலியர்கள், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து புகார் தெரிவித்தபோது, அரசு தலைமை மருத்துவ அதிகாரி, பெறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாவ புகார் தெரிவித்து செவிலியர்கள் பணியை புறக்கணித்து, மருத்துவமனை வாயிலில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கொரோனா நோயாளிகள் 200க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு சரியில்லை என செவிலியர்கள் போராட்டம் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.