தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் N.K. வத்சலாவின் சகோதரர் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
Jul 10 2020 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி N.K. வத்சலாவின் சகோதரர் திரு. N. பாஸ்கரன் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தென்சென்னை தெற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் திருமதி N.K. வத்சலாவின் சகோதரர் திரு. N. பாஸ்கரன் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.