கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படவில்லை என உறுதி செய்க : டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Jul 10 2020 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில், கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க கோரி, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கூடுதல் விலையில் மதுபானங்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.