சேலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 55 ஆண்டுகள் பழமையான மரம் வேருடன் சாய்ந்தது
Jul 10 2020 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தொடங்கிய கனமழை காலை 8 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. இதனால் சேலத்தில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் காட்சியளித்தது. இந்த நிலையில் குமாரசாமிபட்டி பகுதியில் சுமார் 55 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது. இந்த மரத்தின் கிளைகள் பட்டதில் அருகாமையில் உள்ள வீடுகளில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உடைந்தன.