கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரயில் எஞ்சின் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
Jul 11 2020 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரயில் எஞ்சின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூருவிலிருந்து ராயக்கோட்டைக்கு ஓசூர் வழித்தடத்தில் ரயில் எஞ்சின் சென்று கொண்டிருந்தது. ஜொனபண்டா என்ற இடத்தில், நள்ளிரவில் இளைஞர் ஒருவர் திடீரென ரயில் எஞ்சின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.