திருப்பூரில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா - காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்
Jul 11 2020 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரில் உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவர் கடந்த வாரம் விடுமுறை காரணமாக சொந்த ஊரான கன்னியாகுமரிக்குச் சென்று கடந்த 3 நாட்களுக்கு முன் திருப்பூர் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீரபாண்டி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கும் பணி நடைபெற்றது.