திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Jul 11 2020 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 408 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவேற்காடு, வில்லிவாக்கம், ஊத்துக்கோட்டை, சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி, எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 331 பேருக்கு இன்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.