திருவண்ணாமலை மாவட்டத்தில் தபால் நிலையத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா
Jul 11 2020 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டத்தில், தபால் நிலையத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் தபால் நிலையம் மூடப்பட்டது. ஆரணி - தச்சூர் சாலையில் அமைந்துள்ள தலைமைத் தபால் நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பணிபுரியும் 47 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தலைமைத் தபால் நிலையம் மூடப்பட்டது.