விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தலைமைக் காவலர் ஏற்கனவே உயிரிழப்பு - மேலும் 2 பெண் காவலர்களுக்கு தொற்று உறுதி
Jul 11 2020 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் மேலும் இரண்டு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் மூடப்பட்டது. சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிய அய்யனார், கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், மேலும் 2 பெண் காவலர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சேத்தூர் ஊரக காவல் நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.