தந்தை, மகன் கொடூக் கொலை - சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2-வது நாளாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை
Jul 12 2020 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இரண்டாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் குழு, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்
போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மகன் கொடூமாகக் கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ நேற்று தொடங்கியது. ஜெயராஜ் வீடு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று, திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிபிசிஐடி, போலீசார், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை சிபிஐ- யிடம் ஒப்படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, நெல்லையிலிருந்து தூத்துக்குடி சென்ற 7 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பான சில ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தந்தை மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, தாமஸ் ஃபிரான்ஸிஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் திரு. ஜெயகுமார் உத்தரவிட்டுள்ளார்.