கன்னியாகுமரி மாவட்டம் குற்றியார் மலைக் கிராம அங்கன்வாடி மையத்தில் நுழைந்த 11 அடி அரியவகை நாகப்பாம்பு மீட்பு
Jul 13 2020 4:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் குற்றியார் மலைக் கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டடத்திற்குள் நுழைந்த
11 அடி அரியவகை நாகத்தை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அங்கு பதற்றம் நிலவியது. வனக்கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்த கிராமத்தில் 11 அடி ராஜநாகம் ஒன்று ஊர்ந்து செல்வதை கண்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். வனத்துறையினர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கன்வாடி மையத்தில் இருந்து ராஜநாகம் மீட்கப்பட்டது.