ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சி
Jul 13 2020 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் முன்பாக ஒரே அறையில் இடத்தில் இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏ.டி.எம் இயந்திரங்களின் தொடுதிரையை மர்ம நபர் ஒருவர் நேற்றிரவு கல்லை கொண்டு உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் பணத்தை எடுக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.