திண்டிவனத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 2 நாள் முழு கடையடைப்பு
Jul 13 2020 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, வியாபாரிகள் தானாக முன்வந்து 2 நாட்களுக்கு கடைகளை அடைத்துள்ளனர். திண்டிவனம் நகரில் வேகமாகப் பரவி வரும் கொரொனா வைரசை தடுக்க, இன்றும், நாளையும் முழு கடையடைப்பு நடத்த திண்டிவனம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதனை பின்பற்றி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.