தமிழகத்தில் கொரோனா பலி 2 ஆயிரத்தை கடந்தது - இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று
Jul 13 2020 6:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரேநாளில் 66 பேர் பலியானதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது.
தமிழகத்தில் இன்று மீண்டும் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக உயர்ந்தது. சென்னையில் இன்று மட்டும் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 573 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 32 ஆக உயர்ந்தது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 48 ஆயிரத்து 196 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 35 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 92 ஆயிரத்து 567 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, இன்று அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பை பார்ப்போம். மதுரை- 464, காஞ்சிபுரம்- 352, திருவள்ளூர்- 337, செங்கல்பட்டு- 219, கன்னியாகுமரி- 185, விழுப்புரம் - 143, தேனி - 134, வேலூர் - 129, ராணிப்பேட்டை - 126, தூத்துக்குடி - 122, திருநெல்வேலி - 113, சேலம் - 99
திருச்சி - 92 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.