பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பெற்றுக்கொள்ள ஏற்பாடு
Aug 10 2020 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 100 சதவீத மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்தது. அதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 4 லட்சத்து 66 ஆயிரத்து 70 பேர் மாணவிகள். 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 பேர் மாணவர்கள் ஆவர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதிப்பெண் சார்ந்த குறைகள் இருந்தால், வரும் 17ம் தேதி முதல் 25ம் தேதிவரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.