4 மாதங்களுக்குப் பிறகு தமிழகம் முழுவதும் சிறிய கோயில்கள், உடற்பயிற்சி கூடங்கள் இன்று திறப்பு - உற்சாகத்துடன் உடற்பயிற்சிக் கூடங்களில் திரண்ட இளைஞர்கள்
Aug 10 2020 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த சிறிய வழிபாட்டு தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஆகியவை, இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கை அறிவித்தன. தற்போது மத்திய மாநில அரசுகள், ஊரடங்கு விதிகளில், பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன. தமிழகத்தில் இன்று முதல், சிறிய வழிபாட்டு தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள உடற்பயிற்சி மையங்களில், காலையில் இருந்தே பொதுமக்கள், சமூக இடைவெளியுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.