சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கின் விசாரணை கைதி பால்துரை உயிரிழந்த சம்பவம் - முறையான சிகிச்சை இல்லாததே காரணம் என மனைவி பகிரங்க புகார்
Aug 10 2020 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் சித்திரவதை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.பால்துரையின் மரணத்திற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததே காரணம் என அவரது மனைவி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் இருந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததுதும், சாத்தான்குளம் காவல்நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் மற்றும் தத்தார்மடை காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் ஆகியோரின் செயல்பாடுமே காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.