மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்ற தமிழக மாணவர்கள் 4 பேர் நதியில் மூழ்கி பலி : உடல்களை கொண்டுவர உதவுமாறு தமிழக அரசுக்கு பெற்றோர் கோரிக்கை

Aug 10 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில், நீரில் மூழ்கி உயிரிழந்த, தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்களின் உடல்களை தாயகம் கொண்டுவர, மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் உருக்‍கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தலைவாசல் அருகே ஆறகளூரைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர், ரஷ்ய நாட்டின் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவக்‍ கல்வி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், மனோஜ், அவருடன் படித்த சென்னையை சேர்ந்த ஸ்டீஃபன், தாராபுரத்தை சேர்ந்த முஹம்மது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 4 பேரும் மாஸ்கோ, வேல்ஃபோ ஆற்றில் குளித்துக்‍ கொண்டிருந்தபோது திடிரென நீர்சுழற்சியில் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் ரஷ்ய நாட்டு கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பொதுமுடக்‍கம் காரணமாக விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளதால் ரஷ்யாவில் உயிரிழந்த 4 மருத்துவ மாணவர்களின் உடல்களை மீட்டு தாயகம் கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள், இந்திய தூதரகம் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 4 மாணவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர முயற்சி எடுக்‍க வேண்டும் என்று, ஆத்தூர் மாணவர் மனோஜின் பெற்றோர் மற்றும் தாராபுரம் மாணவர் ஆசிக்கின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00