செல்ஃபோன் சார்ஜர் மூலம் மின்கசிவு ஏற்பட்டதால் நேர்ந்த விபரீதம் - கரூர் அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு
Aug 10 2020 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் மாவட்டத்தில் செல்போன் சார்ஜர் மூலம் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் ராயனூர் ராம்நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கடன் சுமை காரணமாக இவரது கணவர் பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு தலைமறைவான நிலையில், தனது குழந்தைகள் ரஷீத், தஷீத் ஆகியோருடன் முத்துலட்சுமி வசித்து வந்தார். இன்று காலை முத்துலட்சுமியின் வீட்டிலிருந்து புகை வந்துள்ளதை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவர்கள் பார்த்த போது முத்துலட்சுமி செல்போன் சார்ஜ் போட்ட நிலையில் சோபாவில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மூன்று சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் கருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.