ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கண்மாய்க்கு துணி துவைக்க சென்றவர் பலி - போலீசார் விசாரணை
Aug 10 2020 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே துணி துவைக்க கண்மாய்க்கு சென்ற சலவை தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார். முத்தையா என்பவர், துணி துவைப்பதற்காக கல்லூர் கண்மாய்க்கு சென்றார். கண்மாய் அருகில் கிடந்த கல்லை தூக்கிய போது தடுமாறிய முத்தையா, மயக்கமடைந்து தண்ணீரில் விழுந்து மூழ்கி பலியானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.