உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழையால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு
Aug 10 2020 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரை அடுத்த உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மறையூர், தூவானம், காந்தூலூர் போன்ற இடங்களில் கனமழையால் சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடிக்குமேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எந்நேரமும் 9 மதகுகள் வழியாக தண்ணர் திறக்கப்படும் என்பதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.