அமமுக அமைப்புச் செயலாளர், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள், வடசென்னை தெற்கு உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய ஊராட்சி செயலாளர்கள் மற்றும் பகுதி, நகர, பேரூராட்சி வார்டு செயலாளர்கள் உள்ளிட்டவைகளுக்கு, புதிய நிர்வாகிகளை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக அமைப்புச் செயலாளராக திரு.S.G. செங்கொடியான், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக திரு.P.R. மனோகரன், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக டாக்டர் M. புவனேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை வடக்கு மற்றும் புதுக்கோட்டை தெற்கு மாவட்டங்கள், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை மத்தி, புதுக்கோட்டை தெற்கு என பிரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக திரு.O. கார்த்திக் பிரபாகரன், புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செயலாளராக திரு.T. விடங்கர், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளராக திரு.K. சிவசண்முகம் ஆகியோரை திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக்கழகச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாமக்கல் மேற்கு மாவட்ட பள்ளிப்பாளையம் ஒன்றியம், பள்ளிபாளையம் வடக்கு, பள்ளிபாளையம் தெற்கு என இரு ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராக திரு.அக்ரி ராமச்சந்திரன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் - சோழிங்கநல்லூர் கிழக்குப்பகுதி கழகச் செயலாளராக திரு.V. குணசேகரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளராக திரு.A. தேவசகாயம், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் திரு.M. ரகு ஆகியோரை திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.
வடசென்னை தெற்கு, செங்கல்பட்டு வடக்கு, திருவள்ளூர் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, சிவகங்கை, விருதுநகர் மத்தி, கோவை தெற்கு மாவட்ட ஒன்றிய, ஊராட்சி கழகச் செயலாளர்கள் மற்றும் பகுதி, நகர, பேரூராட்சி வார்டு கழகச் செயலாளர்களை திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.