சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கின் விசாரணைக் கைதி பால்துரை உயிரிழந்த சம்பவம் - மதுரை அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை
Aug 10 2020 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பால்துரையின் மரணம் தொடர்பாக, மதுரை அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்றினால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பிற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததுதும், சாத்தான்குளம் காவல்நிலைய பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் மற்றும் தத்தார்மடை காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் ஆகியோரின் செயல்பாடுமே காரணம் என அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார். உயிரிழந்த பால்துரையின் உடல், மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பால்துரையின் மரணம் குறித்து, மாஜிஸ்திரேட் பத்மநாபன், மதுரை அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார்.