சென்னையில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பலி - இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு
Aug 12 2020 2:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், கொரோனா பாதிப்பால், இன்று மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் இன்று மேலும் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.