திருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தில் நடைபெற்ற அதிவேக ரயில் சோதனை ஓட்டம் - வழக்கமான சோதனை என ரயில்வே அதிகாரிகள் தகவல்
Aug 12 2020 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி - ராமேஸ்வரம் வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க, ரயில்வே நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, ரயில் வேகத்தை 80 கிலோமீட்டரிலிருந்து 110 கிலோமீட்டராக அதிகரிக்க, இருப்புப்பாதையை பலப்படுத்தும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், இருப்புப்பாதையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் வகையில், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. லக்னோவிலிருந்து வரவழைக்கப்பட்ட சோதனை ரயிலானது, ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டது. காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் இந்த ரயில், சோதனை ஓட்டம் நிறைவடைந்து மீண்டும் இதே மார்க்கத்தில் திருச்சி வந்தடையும்.