நீட் தேர்வு முறைகேடு வழக்கு - மாணவர் உதித் சூர்யா தொடர்ந்த வழக்கில், உண்மை சான்றிதழை நீதிமன்றத்தில் வரும் 24ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு
Aug 12 2020 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட
உண்மைச்சான்றிதழ்களை வரும் 24-ம் தேதிக்குள், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் மோசடி செய்ததாக, சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உதித் சூர்யா தாக்கல் செய்த மனுவில், தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைந்து படிக்கவுள்ளதாகவும், அங்கே தனது உண்மைச் சான்றிதழ்களை கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தனது 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்றுதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களும், நீதித்துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தோடு, இணைக்கப்பட்டுள்ளதால், தன்னுடைய எதிர்காலத்தைக் கருதி நீதிமன்றத்தில் இருக்கும் உண்மைச்சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி பொங்கியப்பன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
உதித்சூர்யா தரப்பில் கூறும்போது, தேனி நீதிமன்றத்தில் தனது சான்றிதழும் ஒப்படைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மாணவரின் சான்றிதழ் எங்கே இருந்தாலும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை ஆகஸ்ட் 25ஆம் தேதி ஒத்தி வைத்தார்.