சாத்தான்குளம் இரட்டைகொலை வழக்கு : காவலர் முருகனின் ஜாமின் மனு வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Aug 12 2020 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து, மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி நசீமா பானு முன்பு, இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முருகன் தரப்பு வழக்கறிஞர் மற்றும் சி.பி.ஐ தரப்பில் வழக்கறிஞர்கள் காணொலி காட்சி வாயிலாக வாதாடினர். இதனிடையே, இவழக்கு தொடர்பான விசாரணை, வரும் 17-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வரவுள்ளது.