கோவை மாவட்டம் வால்பாறையில் குடியிருப்பு பிரச்னை : வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு
Aug 12 2020 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் வால்பாறையில், குடியிருப்பு பிரச்னை தொடர்பாக வட்டாட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு அளித்தனர். வால்பாறையை அடுத்துள்ள கல்லாரில், கடந்த 2018-ம் ஆண்டில் பெய்த கனமழையால், ஆதிவாசிகளின் குடிசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அங்கிருந்தவர்கள், தனியார் எஸ்டேட் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் தங்களை பழைய இடத்திற்கே அனுப்பிவைக்கக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லாததால், சுதந்திர தின விழாவை புறக்கணிக்க முடிவு செய்து, வால்பாறை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.