பெரம்பலூரில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவன் தற்கொலை
Aug 12 2020 6:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகே, மனைவி பிரிந்து சென்ற துக்கம் தாங்காமல் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளியான துரைராஜ் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் மது அருந்தி விட்டு வீட்டிற்குச் சென்றதால், அவரது மனைவி பரமேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பரமேஸ்வரி பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.