தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருது அறிவிப்பு
Aug 12 2020 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் சிறப்பாக பணிபுரிந்ததைப் பாராட்டி மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் பணியாற்றும் காவல்துறையினரின் பணியைப் பாராட்டி ஆண்டுதோறும் மத்திய உள்துறை அமைச்சகம் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருதுகளை வழங்கியுள்ளது. இதில், தமிழகத்தில் 5 பெண் காவல் ஆய்வாளர்கள் உட்பட 6 பேருக்கு மத்திய அரசு விருதுகளை அறிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி G. ஜான்சி ராணி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி M. கவிதா, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி A. பொன்னம்மாள், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. C. சந்திரகலா, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. A. கலா, பெருநகர சென்னை காவல் மத்திய குற்றப்புலனாய்வு உதவி ஆய்வாளர் திரு.T. வினோத்குமார் ஆகியோருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதக்கம் வழங்கப்பட உள்ளது.