ஊரடங்கு முடியும் வரை உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - மின் பகிர்மானக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Aug 14 2020 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கு முடியும் வரை உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறைந்த பட்ச உயர்மின் அழுத்தத்திற்கான 20 சதவீதத்தை மட்டும் கட்ட உத்தரவிட வேண்டும் என தென்னிந்திய ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. ஆனந்த் வெங்கடேஷ், உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் ஸ்பின்னிங் மில் ஆலைகள் மற்றும் வழக்கு தொடர்ந்துள்ள மற்ற தொழில் நிறுவனங்களிடமிருந்து, 20 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மின் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக வசூலித்து இருந்தால் வரும் காலங்களில் உள்ள மின் கட்டணத்தில் சரிபடுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.