ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகல் மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் தாமதமின்றி இ-பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
Aug 14 2020 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் பயணிக்கும் வகையில், வரும் 17-ம் தேதி முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க, வரும் 17-ம் தேதிமுதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன், தொலைபேசி அல்லது அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பம் செய்து பயணிக்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.