தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் மணல் அள்ள எதிர்ப்பு : கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்
Aug 14 2020 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதியில் முறைகேடாக மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். திருச்செந்தூர் அருகே அமராபுரம், கூடல்நகர் பகுதிகளில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, பெரிய செம்மண் குன்றுகள் உள்ளதால் ஏராளமான கனரக இயந்திரங்கள் மூலம் தினமும் ஏராளமான லாரிகளில் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால், பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.