ஓசூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
Aug 14 2020 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முகக்கவசம் அணிந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.