திருச்சியில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Aug 14 2020 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும், அரசு அறிவித்த சம்பளத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், உணவு பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.